Sunday, May 19, 2019

பாரதி கவிதைகள்-



காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானே – நீ
கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே
நோயிலே படுப்பதென்ன கண்ண பெருமானே – நீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே 
காற்றிலே குளிர்ந்ததென்ன கண்ண பெருமானே – நீ
கனலிலே சுடுவதென்ன கண்ண பெருமானே 
சேற்றிலே குழம்பலென்ன கண்ண பெருமானே – நீ
திக்கிலே தெளிந்ததென்ன கண்ண பெருமானே 
ஏற்றி நின்னைத் தொழுவதென்ன கண்ண பெருமானே – நீ
எளியர் தம்மைக் காப்பதென்ன கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்ன கண்ண பெருமானே – நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்ன கண்ண பெருமானே



No comments:

Post a Comment